Tuesday 4 September 2018

அம்மை நோய்

வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன. அம்மை நோய்களில் இருந்து காத்துக் கொள்வது பற்றி ஆலோசனை சொல்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார். வைரஸ் கிருமிகள் மிகவும் நுண்மையானவை. அவற்றின் ஆன்டி ஜீன்கள் அடிக்கடி மாற்றம் அடைவது, புதிய அவதாரம் எடுப்பது போன்ற காரணங்களால் வைரஸ்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது. இந்தியா வெப்ப நாடாக இருப்பதால் இங்கு அம்மை நோய் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. வெரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரசால் சின்னம்மை நோய் ஏற்படுகிறது. பாராமிக்ஸோ குடும்பத்தை சேர்ந்த ஆர்.என்.ஏ. வைரஸ் தட்டம்மையை ஏற்படுத்துகிறது. 

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படும். சின்னம்மையாக இருந்தால் உடலில் வியர்குரு போல சிறிய கொப்புளங்கள் தோன்றும். பின்னர் பெரிதாகி நீர் கோர்த்துக் கொள்ளும். நிறம் மாறி கொப்புளங்களில் இருந்து நீர் வடிந்த பின்னர் வறண்டு உதிரும். கொப்புளம் உள்ள இடங்களில் வடு ஏற்படும். உடலில் அரிப்பு, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் உண்டாகும். ஒரு வாரத்தில் கொப்புளங்கள் உலர்ந்து விடும். இந்த அம்மை நோய் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும். மேலும் கொப்புளம் குணமாகும் வரை இருமல் மற்றும் தும்மல் மூலமாக இந்நோய் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளது. 

சின்னம்மை தானாகவே குணமாகும் அல்லது தக்க மருந்துகளை பயன்படுத்தி குணப்படுத்த லாம். அம்மை நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது சிலருக்கு நிமோனியா அல்லது மூளைக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. கரு தரித்த பெண்களுக்கு சின்னம்மை ஏற்படும்போது கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். குழந்தைக்கு பார்வைக் குறைபாடு, தலை சிறிதாக இருத்தல், மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சின்னம்மை எளிதில் பரவும்  என்பதால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் வருகிறது. சின்னம்மை ஒருவரது வாழ்வில் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் வர வாய்ப்பில்லை.  வாழ்நாள் முழுவதும் இந்த அம்மை நோய்க்கான தடுப்பாற்றல் உடலில் ஏற்பட்டு விடும். சின்னம்மை இது வரை வராத பெரியவர்கள் மற்றும் ஒரு வயது நிறைவடைந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 

குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தட்டம்மை தாக்குகிறது. பொதுவாக அம்மை நோயை முழுமையாக குணப்படுத்தவும், வைரஸ் கிருமிகளை அழிக்கவும் மருந்துகள் கிடையாது. அம்மை நோயால் உடலில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி, அரிப்பு போன்ற பாதிப்புகளைக் குறைத்து, நோய் அறிகுறிகளைப் போக்குவதற்கான மருந்துகள் மட்டுமே உள்ளன. பாதுகாப்பு முறை: வழக்கமாக அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால், வேப்பிலையை தலைமாட்டில் வைத்து படுக்க வைத்து விடுகின்றனர். அம்மைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சல், உடல் வலி மற்றும் அரிப்புக்கு மருந்து எதுவும் எடுத்து கொள்வதில்லை. மேலும் சத்தான உணவு உட்கொள்வதும் இல்லை. இதனால் அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். போதுமான ஓய்வு மற்றும் தூக்கமின்மையால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவற்றை தடுக்க வேண்டியது அவசியம். அம்மையால் ஏற்படும் உடல் பிரச்னைக்கு மருந்து தருவது தெய்வ குற்றம் என்று நினைக்கும் மனநிலை மாற வேண்டும். 

அம்மை நோய் தாக்குவதைத் தடுக்க குழந்தைகளின் ஒன்பதாவது மாதத்தில் இருந்து தடுப்பூசி போட வேண்டும். அதன் பின்னர் குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது எம்.எம்.ஆர். எனப்படும் முத்தடுப்பு ஊசி போட வேண்டியதும் அவசியம். இதில் தட்டமைக்கான தடுப்பூசியும் அடங்கும். சின்னம்மை தடுப்பூசி ஒரு வயது முடிந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் போடலாம். தடுப்பூசிகளை சரியாகப் போடுவதன் மூலம் அம்மை நோய் வராமல் தடுக்கலாம். முறையான மருத்துவம் மற்றும் உணவு முறைகளைப் பின்பற்றி பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கலாம்.  

டயட்

அம்மை நோய் தண்ணீர் மற் றும் காற்றில் உள்ள வைரஸ் மூலம் வெயில் காலங்களில் பரவுகிறது. உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும் போதும் இந்த வைரஸ் தாக்கலாம். அம்மையில் பெரியம்மை, சின்னம்மை என வகைகள் உள்ளன. ஒரு வாரத்துக்கு அம்மை நோய் தீவிரமாக இருக்கும். பின்னர் படிப்படியாக குறைந்து விடும். அம்மை நோய் பரவும் காலங்களில் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவு வகைகள் எடுத்துக் கொள்ளலாம். 

அம்மை நோய் தாக்கியவர்கள் கடுமையான உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். அதோடு மருந்துகள் எடுத்துக் கொண்டால் எளிதில் குணம் பெறலாம். நோய் துவங்கிய உடன் நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், கஞ்சி சாப்பிடலாம். பழச்சாறு கள், பால் குடிப்பதும் நல்லது.
அம்மை நோய் தாக்கத்தின் போது ஏற்படும் காய்ச்சல் குறைந்த பின்னர் மசித்த உணவுகளாக சாப்பிட வேண்டும். சமையலில் எண்ணெய் சேர்க்கக் கூடாது. குறைந்தளவு உப்புதான் எடுக்க வேண்டும். மாதுளை, கருப்பு திராட்சை, சாத்துக்குடி, ஆப்பிள், ஆரஞ்சு பழச்சாறுகள் அருந்தலாம். 

இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அம்மை நோய் விரைவில் குணம் அடையும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மிகவும் நல்லது. அரிசி, வெள்ளை உப்புமா போன்ற மாவுச் சத்து உள்ள உணவுப் பொருட்கள்  சாப்பிட ஏற்றவை. தேங்காய், மசாலா வகைகளை உணவில் சேர்ப்பதை தடுக்க வேண்டும். பட்டை, கிராம்பு, சோம்பு, அசைவ உணவு வகைகள், அதிக நார்ச்சத்து உள்ள உணவுகள், அதிக புரதம் உள்ளவைகளும் இந்த சமயத்தில் எதிரிகளே. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஓய்வும் அவசியம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

ரெசிபி

ஆரஞ்சு சாதம்:  பச்சரிசி ஒரு கப், ஆரஞ்சு பழம் 4, சர்க்கரை 4 டீஸ்பூன், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன், சீவிய ஆரஞ்சு பழத் தோல் 1/4 டீஸ்பூன், ஆரஞ்சுப் பழத்தை சாறு எடுத்துக் கொள்ள வும். அத்துடன் தேவையான தண்ணீர் சேர்த்து அரிசியை வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் கால் டீஸ்பூன் நெய் விட்டு ஆரஞ்சுப்பழத் தோலை வறுத்து அதில் உப்பு, சர்க்கரை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, சாதத்தை சேர்த்து கிளறவும். இறுதியில் கொத்தமல்லித் தழை சேர்க்கவும். இனிப்பு, உப்பு, புளிப்பு கலந்த சுவையில் இருக்கும்.

ரொட்டி உப்புமா: ரொட்டி துண்டுகள் 10 எடுத்து நறுக்கி கொள்ளவும். தக்காளி 2, வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, சீரகம் 1 டீஸ்பூன், மல்லித் தழை மற்றும் உப்பு தேவையான அளவு. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகத்தை வறுத்துக் கொள்ளவும். இத்துடன் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பொடித்த ரொட்டி துண்டுகளைப் போட்டு உப்புமா போல வறுக்கவும். கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.  

ரவா இட்லி: வெள்ளை ரவை 1 கப், தயிர் ஒரு கப், தக்காளி சாஸ் 2 டீஸ்பூன், தாளிப்பதற்கு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், ஆகியவை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். வெள்ளை ரவையில் தயிர், தக்காளி சாஸ் சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்கள் சேர்த்து தாளித்து ரவைக் கலவையில் உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து இட்லி போல வேக வைத்து எடுக்கவும்.

பாட்டி வைத்தியம்

*   லேசாக உப்பு சர்க்கரை சேர்த்து தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் சோர்வு தீரும்.
*   அம்மை நோய் குணமடைந்த பின் வெள்ளரிப் பழத்துடன் நாட்டு வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் பலவீனம் நீங்கும்.
*   உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு பூண்டு, வெங்காயம் இரண்டையும் நெய்யில் வதக்கி சாப்பிடலாம்.
*   அம்மை காலத்தில் ஏற்படும் காய்ச்சல் தணிய வேப்பிலை, நெய், தேன் மூன்றையும் சேர்த்து புகை மூட்டம் போட்டால் காய்ச்சல் உடனே குறையும்.
*   வேப்பிலை, நெல்லி முள்ளி இரண்டையும் அரைத்து வெண்ணெய் கலந்து உடலில் பூசிக் கொண்டால் அம்மை அரிப்பு குணமாகும்.
*   வேப்பிலையை வறுத்து தலைக்கு வைத்து தூங்கினால் காய்ச்சல் குணமாகும்; தூக்கமும் வரும்.
*   வேப்பமரப் பட்டை, 2 ஸ்பூன் சீரகம் சேர்த்து பொடி செய்து பசும்பால் சேர்த்து குடித்தால் காய்ச்சல் குணமாகும்.
*   அம்மை நோய் குணமான பின்னர் ரோஜா, செம்பருத்தி, சிறுபருப்பு, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் உடலின் அழகு கூடும்.
*   மூங்கில் அரிசியில் கஞ்சி செய்து சாப்பிட்டால் காய்ச்சல் உடனடியாக குணமாகும்.
*   முருங்கை வேரை பாலில் கொதிக்க வைத்துக் குடித்தால் இழந்த சக்தியை பெறலாம்.
*   மருதம் பட்டை, வேப்பம் பட்டை இரண்டையும் சம அளவில் அரைத்து சாப்பிட்டால் கிருமித் தொற்று ஏற்படாது. 

Sunday 26 August 2018

மணப்பெண் அலங்காரம் - Bridal Make up

மணப்பெண் அலங்காரம் - Bridal Make up

பெரியளவு மூலதனம் இல்லாமல், பெண்கள் வீட்டில் இருந்தவாறே சம்பாதிக்க கூடிய தொழில்களில் இதுவும் ஒன்று. இதற்கென கடை எடுத்து பியூட்டி பார்லர் போட்டு ஆரம்பிக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் வீட்டில் இருந்தாவாறே செய்யலாம். மேலும் உங்கள் தெரிந்தவர்கள், நண்பிகள், உறவினர்கள் என பலருக்கு சொல்லி அவர்களுக்கு தேவைப்படும்போது அவர்களின் இடத்திலேயே செய்யலாம்.


நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை ஒரு நல்ல முக அழகு கலை நிபுணரிடம் இந்த கலையை கற்றுக்கொள்வது. ஆறு மாதத்தில் நிறைவு பெறலாம் அல்லது ஒரு வருடமும் ஆகலாம். மேலும் இது சம்பந்தமான நூல்கள், இணையத்தளங்கள், பிளாக்குகள் (Blog) ஆகியவற்றை நிறைய வாசித்து மேலும் அறிவை வளர்த்து கொள்ளலாம்.


பின்பு அழகு கலைக்கு தேவையான தரமான அழகு சாதன பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். இது சம்பந்தமான ஆலோசனைகள் இணையத்தளங்களில் நிறையவே இருக்கின்றன. அப்படி வாங்கும்போது நல்ல ஒரு கடையில் வாங்கி அதன் நிரந்தர வாடிக்கையாளராக ஆகி கொள்ளுங்கள்.

மணப்பெண் முக அலங்காரம், மணப்பெண் சிகை அலங்காரம், மணப்பெண்ணுக்கு மருதாணி இடுதல், மணப்பெண் ஆடை உடுத்தல் போன்றவற்றை முறையாக கற்றுக் கொண்டால் நல்ல வருமானம் சம்பாதிக்கலாம்.

தற்கால உலகில் பெண்கள் ஆடை, அலங்காரம் சம்பந்தமான தொழில்கள் நிறைய இலாபம் சம்பாதிக்க உதவும் தொழில்களாக மாறியுள்ளன. இது நிறைய வாடிக்கையாளர்களை கொண்டு வரும். முதலில் நம் வீட்டு பெண்கள், நண்பிகள், பக்கத்து வீட்டு பெண்கள் என்று ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் மூலமாகவே வாடிக்கையாளர்களை பெற்று கொள்ளலாம்.

இந்த தொழிலில் ஈடுப்ப்படும்போது மிக முக்கியமான ஒன்று தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல் வேண்டும். ஆரம்பத்தில் ஒருவரிடம் கற்றோம் அது மட்டும் போதும் என்று நினைக்க கூடாது. அப்படி இருந்தால் கால மாற்றத்திற்கேற்ப உங்களால் தொழிலில் நிலைத்து நிற்க முடியாது. எனவே புதிய டிசைன்கள், புதிய தொழில் நுட்பங்களை இன்டர்நெட், நூல்கள் மூலம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

இவ்வாறு வீட்டில் இருந்தவாறே சிறிது சிறிதாக ஆரம்பித்து, தொழிலில் அனுபவமும், நிரந்தர வாடிக்கையாளர்களும், நல்ல வருமானமும் அமையும்போது தொழிலை விருத்தி செய்து பாரியளவில் செய்யலாம்.

Wednesday 3 January 2018

தமிழ்நாடு தொழில் முனைவோர் தகவல் மற்றும் வழிகாட்டி தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட சிறு தொழில் மைய முகவரிகள் : (www.tamilnadu.business

தமிழ்நாடு தொழில் முனைவோர் தகவல் மற்றும் வழிகாட்டி
தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட சிறு தொழில் மைய முகவரிகள் :
(www.tamilnadu.business )
1.
சென்னை
இயக்குநர்
தொழில் மற்றம் வர்த்தக மைய அலுவலகம்
தொழில் மற்றும் வர்த்தகத் துறை
சேப்பாக்கம்
சென்னை- 600005
தொலை பிரதி : 28547026, 28548517
தொலைபேசி : 044 28548173
indcom@tn.nic.in
2.
சென்னை
மண்டல துணை இயக்குநர் அலுவலகம்
எண்:47, அண்ணாசாலை
சென்னை - 600002
தொலைபேசி : 044 28549753
dicchn@tn.nic.in
3.
கோவை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
எண்: 2, ராஜா சாலை
கோவை
தொலைபேசி : 0422 391678, 397311
diccbe@tn.nic.in
4.
கடலூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
செம்மண்டலம்
கடலூர்.
தொலைபேசி : 04142 310116, 310192
diccud@tn.nic.in
5.
தர்மபுரி
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
சிட்கோ, சேலம் முதன்மை சாலை,
தர்மபுரி
தொலைபேசி : 04342 230892, 231081
dicdpi@tn.nic.in
6.
திண்டுக்கல்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
எஸ்.ஆர். மில்ஸ் சாலை
சிட்கோ தொழில் பண்ணை வளாகம்
திண்டுக்கல் 624 003
தொலைபேசி : 0451 470893, 422417.
dicdgl@tn.nic.in
7.
ஈரோடு
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
சிட்கோ தொழில் பண்ணை வளாகம்
ஈரோடு
தொலைபேசி : 0424 275283, 275859
dicerd@tn.nic.in
8.
காஞ்சிபுரம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
காஞ்சிபுரம் 631 501
தொலைபேசி : 04112 238837, 238551
dickpm@tn.nic.in
9.
கரூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
ஜவஹர் பிளாசா
152, இரண்டாவது தளம்
ஜவஹர் பசார்
கரூர் 639 001
தொலைபேசி : 04324 264272
dickar@tn.nic.in
10.
நாகப்பட்டினம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நேதாஜி ரோடு
நாகப்பட்டினம் 611110
தொலைபேசி: 04652 41193
dicngp@tn.nic.in
11.
மதுரை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
அழகர் கோயில் தெரு
மதுரை 625 002
தொலைபேசி: 0452 537621, 537128, 530358.
dicmdu@tn.nic.in
12.
நாகர்கோயில்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
கன்னியாகுமரி மாவட்டம்
கோணம்
நாகர்கோயில்
தொலைபேசி: 04652 200008
dickkm@tn.nic.in
13.
நாமக்கல்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
கேகேபி கட்டிடம்
114 பி5, சேலம் சாலை
நாமக்கல் 637 001.
தொலைபேசி : 04286 577251
dicnmk@tn.nic.in
14.
பெரம்பலூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
56 பி, ராஜாஜி நகர்
அரியலூர் 621 713
தொலைபேசி: 04329 222363, 20004.
dicpmb.tn.nic.in
15.
புதுக்கோட்டை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
புதுக்கோட்டை
தொலைபேசி : 04322 21794
dicpdk@tn.nic.in
16.
இராமநாதபுரம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
பட்டினம் காத்தான்போஸ்ட்
வெளிப்பட்டினம்
இராமநாதபுரம் வழி
625 535
தொலைபேசி : 04567 - 30497
dicrmd@tn.nic.in
17.
சேலம்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
தொழில்சாலை வளாகம்
5 ரோடு, சேலம்.
தொலைபேசி : 0427 448505, 447878
dicslm@tnau.nic.in
18.
சிவகங்கை
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
சிவகங்கை
தொலைபேசி : 04575 40257, 40407
dicsug@tn.nic.in
19.
தஞ்சாவூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நஞ்ககோட்டை ரோடு
தஞ்சாவூர் 613 006
தொலைபேசி : 04362 355318
dictnj@tn.nic.in
20.
தேனீ
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
நெ.56, பாரதி ரோடு
தேனீ
தொலைபேசி : 04546 72081
dicthn@tn.nic.in
21.
திருவள்ளூர்
பொது மேலாளர்
மாவட்ட தொழில் மையம்
1டி, சிவி நாயுடு சாலை
2வது தளம்
ஜெயா நகர்
திருவள்ளூர் 602 601
தொலைபேசி : 04116 666787
dictlr@tn.nic.in
22.
திருச்சி
வட்டாட்சியர் அலுவலக சாலை
திருச்சி 62001
தொலைபேசி: 0431 460823
460331
dictry@tn.nic.in
23.
திருவண்ணாமலை
நெ.5, டிடி, பிளாட் நெ.35
பா.வு.சா. நகர்
மாந்தோப்பு
திருவண்ணாமலை 606601
தொலைபேசி: 04175 24849
dictvm@tn.nic.in
24.
திருவாரூர்
நெ.7, புது தெரு
திருவாரூர்
தொலைபேசி: 04366, 540028
dictvr@tn.nic.in
25.
திருநெல்வேலி
தாமஸ் ரோடு
திருநெல்வேலி 627 001
தொலை பேசி : 0462 572162
572384
dictnv@tn.nic.in
26.
தூத்துக்குடி
பாளையம் கோட்டை ரோடு
பை பாஸ் சாலை அருகில்
தூத்துக்குடி 628 101
தொலைபேசி : 0423 443947
dictut@tn.nic.in
27.
உதகை
உதகை 643006
தொலைபேசி: 0423 443947
dicnlg@tn.nic.in
28.
வேலூர்
காங்கேய நல்லூர் ரோடு
காந்தி நகர் தொழில் வளாகம்
வேலூர் 632 006
தொலைபேசி : 0416 244257
dicvel@tn.nic.in
29.
விழுப்புரம்
பவானி சாலை
அலமேலு புரம்
விழுப்புரம்
தொலைபேசி : 04146 23616
dicvpm@tn.nic.in
30
விருதுநகர்
வட்டாட்சியர் அலுவலக வளாகம்
விருது நகர் 626 002
தொலைபேசி : 04562 352739
dicvnr@tn.nic.in

யு.ஒய்.இ.ஜி.பி., திட்டம்

மையம் (SIDCO)


CONTENTS

யு.ஒய்.இ.ஜி.பி., திட்டம்


வங்கிகள்


கல்வித்தகுதி


ஆண்டு வருமானம் மற்றும் மானியம்


தொழில்கள்


விண்ணப்பங்கள்


ஆவணங்கள்


யு.ஒய்.இ.ஜி.பி., திட்டம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழக அரசு யு.ஒய்.இ.ஜி.பி., திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சம் 5 லட்சம், சேவை தொழிலுக்கு 3 லட்சம் மற்றும் வியாபார தொழிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.

வங்கிகள்

வணிக வங்கிகள்,


அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்,


தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள்


கல்வித்தகுதி

குறைந்த பட்சம் 8ம் வகுப்பு முடித்த, 18 வயது பூர்த்தியான தனி நபர் விண்ணப்பிக்கலாம். வயது தகுதி - பொதுப்பிரிவினர் 35; சிறப்பு பிரிவு, எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் படை வீரர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் - 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆண்டு வருமானம் மற்றும் மானியம்

ஆண்டு வருவாய் 1.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் திட்ட மதிப்பில் 10 சதவீதம், சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் பங்களிப்பு செலுத்த வேண்டும். கடன் தொகையில் தமிழக அரசு 15 சதவீதம் மானியம் வழங்குகிறது.

கடன் திட்டத்துக்கான விண்ணப்பம், ஆவண இணைப்பு மற்றும் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள தொழில் திட்டங்களை, மாவட்ட தொழில் மைய வலைதளத்தில் இருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.

தொழில்கள்

ரெடிமேடு ஆடை, பாக்கு மட்டை, டிஜிட்டல் பிரின்டிங், காலணி உற்பத்தி, ஹாலோ பிளாக் உற்பத்தி, லேத் பட்டறை, லேபிள் பிரின்டிங், கோன் வைண்டிங், நெட் சென்டர், விசைத்தறி, போட்டோ பிரேம் கடை, போட்டோ ஸ்டுடியோ, அழகு நிலையம், பர்னிச்சர் மற்றும் வாடகை பாத்திர கடை, டாக்ஸி, ஜெராக்ஸ், மொபைல் போன் சர்வீஸ், மளிகை கடை

விண்ணப்பங்கள்

அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் இயங்கும் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அவற்றை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆவணங்கள்

பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்றிதழ் நகல்,


சுயதொழில் தொடங்குவதற்காக வாங்கப்படும் இயந்திரங்கள்,


தளவாடங்களுக்கான விலை மதிப்பீடு (கொட்டேஷன்), சாதிச்சான்றிதழ் நகல்,


திட்ட அறிக்கை (புராஜக்ட் ரிப்போர்ட்),


குடும்ப அட்டை நகல்,


குடும்ப அட்டை இல்லையென்றால் வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்று,


முன்னாள் ராணுவத்தினர் அல்லது மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான சான்று,


பாஸ் போர்ட் அளவு 2 புகைப்படங்கள்,


உறுதி மொழிப் பத்திரம்


ஆதாரம் : மாவட்ட சிறுதொழில் மையம் (சிட்கோ)

Thursday 26 January 2017

AutoCAD Tricks - ஆட்டோ கேட் இல்லாத கணினிக்கு டிராயிங் ஃபைலை எந்த வடிவில் மாற்றினால் நல்லது?


வழக்கமாக ஆட்டோ கேடில் நாம் ஒரு வரைபடத்தை உருவாக்கி சேமிக்கும் பொழுது அது DWG கோப்பாக இருக்கும். இந்த கோப்பு ஆட்டோ கேட் மென்பொருள் உள்ள கனினியில் மட்டுமே திறக்கும் படியாக இருக்கும்.

சில சமயங்களில் நமது வாடிக்கையாளருக்கு ஒரு டிராயிங்கை மின் அஞ்சல் செய்யும்படி இருக்கும். அதேவேளை அவரது கணினியில் ஆட்டோ கேட் மென் பொருள் இல்லாமல் இருக்கலாம். அல்லது ஆட்டோ கேட் உபயோகிக்க தெரியாதவராக இருக்கலாம்.

இதற்கு நம்மில் பலர் உபயோகிக்கும் வழி, அந்த கோப்பை JPG or Tiff கோப்பாக மாற்றி அனுப்புவது. ஆனால் இந்த முறையில் மாற்றப்படும் படங்கள் அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை அத்தோடு Background colour கருப்பு நிறமாக இருப்பதால், படத்தை பார்ப்பவருக்கும் ஒரு வித சலிப்பை தட்டும் விதமாக இருக்கும். பெரிய வரைபடமாக இருந்தால் அதை Zoom in / Zoom out செய்யும் பொழுது படத்தின் தரம் மிகவும் மோசமானதாக இருப்பதுடன். அதில் ஒரு Proffessional Touch இருக்காது. PDF கோப்பாக மாற்றுவதற்கும் நம்முடைய கணினியில் வசதி இருக்க வேண்டும்.

இந்த பிரச்சனையை எளிதாக தீர்க்க..,

விண்டோசில் WMF (Windows Meta File) என்ற வடிவம், அனைத்து கணினியிலும் திறக்கக் கூடியதாகவும் (Windows Picture and Fax viewer), எவ்வளவு பெரிதாக்கினாலும் தரம் குறையாமல் இருக்கும்.

வழக்கமாக ஆட்டோ கேடில் டிராயிங் ஏரியா கருப்பு நிறமாக இருக்கும். இதை வெள்ளை நிறமாக மாற்றுவோம்.

Tools menu விற்கு சென்று Options கிளிக் செய்யவும். இதில் Display tab-ல் Colours பட்டனை கிளிக் செய்து Window Element - இன் கீழ் Model Tab Background என்று இருப்பதில் நிறத்தை Black இற்கு பதிலாக White ஐ தேர்வு செய்து கொள்ளவும். Apply&Close மற்றும் Apply பிறகு Close கொடுத்து விடவும். இப்பொழுது உங்கள் டிராயிங் ஏரியா வெண்மையாக மாறியிருக்கும்.

இப்பொழுது Command Window வில் wmfout என்ற கட்டளையை கொடுத்து என்டர் செய்து, கோப்பின் பெயரை கொடுத்து, பிறகு டிராயிங் ஏரியாவை தேர்வு செய்து என்டர் கொடுத்தால் போதுமானது.

WMF கோப்பு ரெடி! இனி இந்த கோப்பு எல்லா கணினியிலும் ஆட்டோ கேட் துணையின்றி திறக்கும்படியாக இருக்கும்.

மேலே குறிப்பிட்ட வழியை பின்பற்றி டிராயிங் ஏரியாவின் நிறத்தை பழையபடி கருப்பாக மாற்றிவிடவும்.

Wednesday 2 November 2016

நிறுவனம் அமைப்பது எப்படி?

  
நண்பர்களுக்கு வணக்கம்!

நமது ஏற்றுமதி வழிகாட்டி தளம் தங்களை அன்புடன் வரவேகிறது.

நாம் நன்றாயிருந்தால் போதும் 
என்று நினைப்பது சுயநலம்...! 
நாடும் நன்றாயிருக்க வேண்டும் 
என்று நினைப்பது பொதுநலம்...! 

இதில் இரண்டாவது வகைதான் இந்த ஏற்றுமதி துறை. இத்துறையை தேர்ந்தெடுத்து இருப்பதிலேயே உங்களின் பொதுநலம் எனக்கு தெரிகிறது. அதற்கே உங்களுக்கு முதலில் கோடானுகோடி நன்றி சொல்ல வேண்டும்.

காரணம், ஏற்றுமதியில்  நாமும் நலம் பெறுவோம் நாடும் வளம் பெரும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

சரி நண்பர்களே, வாருங்கள் பதிவைப் பார்ப்போம்.

நீங்கள் ஏற்றுமதி செய்ய முடிவெடுத்தபின் முதலில் செய்ய வேண்டியது, அது எந்த வகையான ஏற்றுமதி நிறுவனம் என்பதை தேர்ந்தெடுப்பதுதான்.

பொதுவாக நிறுவனங்கள் என்றுஎடுத்து கொண்டால்,

1.Proprieter, (தனி ஒரு நபராக செயல் படுவது)

2.Partnership, (சிலர் கூட்டாக சேர்ந்து செயல் படுவது)

3.Private limited (பலர்கூட்டாக சேர்ந்து செயல் படுவது)

எனும் இந்த மூன்று வகைகளில்தான் இருக்கும். இதில் எந்த வகை சிறந்தது என்றால்,அது Proprietor ஆகத்தான் இருக்கும். இதில் நீங்கள்தான் முதலாளி. உலகில் என்பது சதவிகிதம் பேர் இந்த வகை ஏற்றுமதியாளர்களே.

இந்த மூன்றில் நீங்கள் எந்த வகையான நிறுவனத்தை தொடங்கபோகிறீர்கள் என்பதை முடிவெடுத்த பின், அடுத்து நீங்கள் என்ன வகையான ஏற்றுமதியாளர் என்பதை முடிவெடுக்க வேண்டும். இதில் இரண்டு வகை உண்டு.

1.Merchant exporter
(பொருட்களை பிறரிடமிருந்து      வாங்கி    ஏற்றுமதி செய்வது)

  
2.Manufacture exporter
(பொருட்களை நீங்களே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வது)

இதில், நீங்கள் முதல் வகையான இறக்குமதியாளர் கேட்கும் பொருட்களை, பிறரிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்யும்Merchant exporter - ஆக இருப்பதே சிறந்தது.

காரணம், நீங்கள் Merchant exporter - ஆக இருப்பின் எந்த பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியும். அதுவே, நீங்கள் Manufacturer export - ஆக இருப்பின் நீங்கள் குறிப்பிட்ட பொருட்களை மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.

இவைகளில் நீங்கள் எந்த வகையான ஏற்றுமதி நிறுவனம்அமைக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்த பின், இதன் அடுத்த பாகமானநிருவனத்திற்க்குபெயர் வைப்பது எப்படி?என்ற பகுதிக்கு வாருங்கள்.