Wednesday, 27 January 2016

தேர்வில் வெற்றிபெற நேர மேலாண்மை மிக முக்கியம் என சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். சாதிக் கூறினார்.

தேர்வில் வெற்றிபெற நேர மேலாண்மை மிக முக்கியம் என சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். சாதிக் கூறினார்.

"தினமணி', சாஸ்தா கல்வி நிறுவனங்கள் இணைந்து சென்னையில் சனிக்கிழமை நடத்திய "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ். சாதிக் பேசியது:

நான் பள்ளிப் படிப்பை மேற்கொண்ட காலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. 11 ஆண்டுகள் படிக்க வேண்டும். அதன் பிறகு "இன்ட்டர் மீடியேட் என கல்லூரி சென்று படிக்க வேண்டும்.

அந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அறிவியல் பாடத்துக்கு 2.30 மணி நேரம் கால அவகாசம் கொடுப்பார்கள். இதில் முதல் பக்கத்தில் 40 மதிப்பெண்களுக்கு கொள்குறி தேர்வு முறை (அப்ஜெக்டிவ் டைப்) கேள்விகள் இடம்பெற்றிருக்க வேண்டும். மீதமுள்ள 60 மதிப்பெண்களுக்கு 10 கேள்விகள் இரண்டாம் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும். இதற்கு எழுத்து வடிவில் பதிலளிக்க வேண்டும். இந்த 10 கேள்விகளும், எனக்கு நன்கு தெரிந்தவையாக இருந்தன.

பின்னர் தேர்வு எழுத ஆரம்பித்து முதல் பக்கத்தை முடித்து, இரண்டாம் பக்கத்தில் 5 கேள்விகளுக்குப் பதில் அளித்து முடித்திருந்த நிலையில் தேர்வு முடிய இன்னும் 30 நிமிடங்கள் தான் உள்ளன என தேர்வு கண்காணிப்பாளர் கூறினார்.

இதைக் கேட்டு, மீதமுள்ள 5 கேள்விகளுக்கும் அவசர, அவசரமாக பதிலளிக்க வேண்டியச் சூழல் ஏற்பட்டது.

அப்போது கைக் கடிகாரங்கள் கிடையாததால், தேர்வில் நேரத்தைக் கவனிக்க முடியாமல் போனது. தேர்வு முடிவுகள் வெளியானபோது, அறிவியல் பாடத்துக்கு 100 மதிப்பெண்களுக்கு 56 மதிப்பெண்கள்தான் கிடைத்தது.

இதன் காரணமாக, கல்லூரியில் "இன்ட்டர் மீடியேட்' சேருவதும், பட்டப் படிப்பில் சேருவதும் சவாலாக இருந்தது. பின்னர் சிபாரிசு மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலை இப்போது மேலும் மோசமாகி விட்டது. இன்றைக்கு மாணவர்களைப் பணிக்குத் தேர்வு செய்யும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், பிற நிறுவனங்களும் 10-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை இடையே தோல்வி அடையாமலும், 70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனரா எனப் பார்க்கின்றன. அவர்களை மட்டுமே பணிக்குத் தகுதியானவர்களாக கருதுகின்றன.

எனவே, மாணவர்கள் தேர்விலும், வாழ்விலும் வெற்றிபெற நேர மேலாண்மை மிக அவசியமாகும்.

தேர்வில் ஒரு மதிப்பெண்ணுக்கு எத்தனை நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் கணக்கிட்டு, அதன்படி பதிலளிக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்லூரியில் சேருவதற்கு முன்...

மேலும், பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி மாணவர்கள் கூட, பட்டப் படிப்பில் குறிப்பாக பொறியியல் பட்டப் படிப்பு முதலாம் ஆண்டில் கணிதத் தேர்வில் தோல்வியடைவது வாடிக்கையாகி வருகிறது.

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் மனப்பாட முறையில் படித்து தேர்ச்சி பெறுவதே இதற்கு காரணம்.

எனவே, பி.இ. சேரப் போகும் மாணவர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிந்து விடப்படும் 2 மாத விடுமுறைக் காலத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 கணிதப் பாடங்களை புரிந்து படித்துக் கொள்வது அவசியம்.

வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள படிப்புகள்: இதுபோல் பிளஸ்-2 முடித்து நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் அனைவரும் முதலில் மருத்துவத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். அது கிடைக்கவில்லையெனில் அண்ணா பல்கலைக்கழகம் என்ற நிலைதான் தொடர்ந்து இருந்து வருகிறது.

இதைத் தாண்டி சிறந்த படிப்புகளில் சேருவதற்கான வழிகளும், உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய ஏராளமான படிப்புகளும் உள்ளன.

அதாவது, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மருத்துவப் படிப்புகள், ஐஐடி, என்ஐடி, ஐ.ஐ.எஸ்சி. போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு பல்வேறு அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் உள்ளன.

இந்தத் தேர்வில் தகுதி பெறுவதன் மூலம் உயர் தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் சேர முடியும்.

இதுதவிர, துணை மருத்துவப் படிப்புகள், ஹோட்டல் மேலாண்மை, விஷுவல் கம்யூனிகேஷன் போன்ற உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய ஏராளமான படிப்புகளும் உள்ளன. எனவே, இதுபோன்ற படிப்புகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார் சாதிக்.

ஓய்வுபெற்ற பள்ளி தலைமையாசிரியர் அர்த்தநாரி: மாணவர்கள் தேர்வுக்கு எப்படித் தயாராக வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம். தேர்வறையில் கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும், அதை முழுமையாக படித்து தெரிந்த கேள்விகள் எவை, தெரியாதவை எவை என்பதை குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதிலளித்துவிட வேண்டும்.

மேலும், நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் விடையளிப்பது என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.

மேலும் விடைத் தாளில் ஒவ்வொரு வரிக்கும் சரியான இடைவெளி விட்டு, ஒவ்வொரு பதிலுக்கும் 1 செ.மீ. அளவுக்கு இடைவெளி கொடுத்து எழுத வேண்டும். தேர்வு நேரத்தில், விடைகளை அழகுபடுத்துதல் என்ற பெயரில் வண்ண வண்ண கோடுகளைப் போடும் செயலில் ஈடுபடவேண்டாம். இதனால் நேரம்தான் வீணாகும்.

அதோடு, ஒரு மதிப்பெண் கேள்விக்கு ஒரு வரியில் மட்டுமே பதிலளிக்க வேண்டும். பிற கேள்விகளுக்கும் விடை என்னவோ அதை மட்டும், பாயின்ட்டுகளாக எழுத வேண்டும்.

தேர்வு எழுதி முடித்த பிறகு, அனைத்து கேள்விகளுக்கு சரியாக பதிலளித்திருக்கிறோமா, கேள்வி எண்ணும், பதிலுக்கு அளித்துள்ள எண்ணும் சரியாக போட்டுள்ளோமா என்பதை பார்ப்பது மிக முக்கியம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தேர்வுத்தாள் திருத்துபவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதோடு, அதிக மதிப்பெண்ணையும் பெற முடியும் என்றார்.

"இயற்பியலை புரிந்து படித்தால் வெற்றி நிச்சயம்'

இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்பது குறித்து இயற்பியல் ஆசிரியர் எம். கல்பனா "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விளக்கினார்.

அப்போது அவர் பேசியது: "புளு பிரிண்ட்' அடிப்படையில் தேர்வுக்கான பாடங்களை திட்டமிட்டு படிக்க வேண்டும். இயற்பியலில் 200 மதிப்பெண் எடுப்பதற்கு ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு சரியான பதில் எழுதுவது முக்கியம்.

பாடங்களையும் அவற்றுக்கான பொருள்களையும் புரிந்து படித்தால் ஒரு மதிப்பெண் கேள்விகள் முப்பதுக்கும் சரியான விடை எழுதலாம்.

என்ன படிக்கிறோம் என்பதை புரிந்துப் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். நீண்ட நாள்களுக்குப் பாடங்கள் நினைவில் இருக்க வேண்டுமென்றால் மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்க வேண்டும் என்றார்.

வேதியியலுக்கு சமன்பாடுகள் முக்கியம்

வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவது தொடர்பாக வேதியியல் ஆசிரியர் ஆர். பழனியப்பன் "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வழங்கிய அறிவுரை:

தேர்வுக்கு தன்னம்பிக்கையுடன் தயாராக வேண்டும். வேதியியலை கடினம் என்று நினைக்காமல், சுலபம் என்று நினைத்துப் படிக்க வேண்டும்.

ஆவர்த்தன அட்டவûணையை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலமே நல்ல மதிப்பெண் கிடைக்கும். இயற்பியல் வேதியியல், வெட்ப இயக்கவியல், வேதி சமநிலை, கனிம வேதியியல், உட்கரு வேதியியல் ஆகிய பாடங்களைப் படித்திருந்தால் எளிதாக தேர்ச்சி பெறலாம்.

தேர்ச்சி அடைவதற்கான பாடம் வெட்ப இயக்கவியல் ஆகும். கேள்விகளை நன்றாகப் படித்து பதிலளிக்க வேண்டும். மேலும் வேதியியலுக்கு சமன்பாடுகளும், வரைபடங்களும் அவசியம். தேவைப்படும் இடத்தில் அவற்றை கட்டாயம் எழுத வேண்டும். அப்போதுதான் முழு மதிப்பெண் கிடைக்கும்.

வேதியியல் பாடம் எவ்வளவு படித்தாலும் படிக்காதது போலவே இருக்கும். படித்தது அனைத்தும் மறந்து விட்டது என்று அஞ்சக்கூடாது. தைரியமாகத் தேர்வுக்குச் செல்ல வேண்டும். கேள்வித் தாளை பார்த்தவுடன் பயிற்சி செய்த அனைத்து சமன்பாடுகளும் தானாக நினைவுக்கு வந்து விடும் என்றார் பழனியப்பன்.

பிளஸ், மைனஸ் நோயை ஒழிக்க வேண்டும்

கணிதப் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுப்பது எப்படி என்பதை கணித ஆசிரியர் எஸ். ஆனந்த கிருஷ்ணன் "சிகரத்தை வெல்வோம்' நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விளக்கினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கணிதப் பாடம் கடினம் அல்ல. கணிதத்தைப் புரிந்துகொள்ள கூர்ந்து கவனிப்பது அவசியம்.

இதில் தேர்ச்சி பெறுவது மிகவும் சுலபம். 200 மதிப்பெண்களை பெறுவதற்கான ஆரம்பம், 1 மதிப்பெண் கேள்விகள்தான். அதாவது, புத்தகத்துக்கு பின்னால் உள்ள 271 கேள்விகளையும் தினமும் பயிற்சி செய்து பார்த்தால் 30 மதிப்பெண்கள் உறுதி.

அதற்கு, இந்தக் கேள்வி பதில்களை கொள்குறி தேர்வு முறையில் (அப்ஜெக்டிவ் டைப்) வடிவமைத்து, தினமும் சரி, தவறு என "டிக்' செய்து சுயபயிற்சி எடுத்துவந்தாலே போதுமானது.

மேலும் கணிதத்தில் முக்கியமானக் கேள்வி என்று எதையும் குறிப்பிட முடியாது.

இதுவரை பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட எந்த ஒரு கேள்வியும் 6 அல்லது 7 தடவைகளுக்கு மேல் திரும்பக் கேட்கப்படவில்லை.

தேர்வின்போது கேள்விகளை நன்றாகப் படித்துப் பார்த்து விடை எழுத வேண்டும். அதேபோல விடை எழுதும் பொழுது பிளஸ், மைனஸ் குறிகளை சரியாகப் பயன்படுத்துகிறோமா என்பதை சரிபார்க்க வேண்டும்.

பிளஸ், மைனஸ் குறிகளை தவறாக குறிப்பது ஒரு நோய். இந்த நோயைக் குணப்படுத்த வேண்டும். அதற்கு கணக்குகளை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.

சூத்திரங்களையும் கணக்குகளையும் எளிதான முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் முறைகளைக் கண்டறிய வேண்டும். பிளஸ் 2 தேர்வில் 90 சதவீத மதிப்பெண் பெறுவோர் கூட பொறியியல் கணக்கில் தோல்வியடைகின்றனர். பிளஸ் 1 வகுப்பில் வரும் கணக்குகளை நன்றாக தெரிந்து வைத்திருந்தால் பொறியியல் கணக்கு எளிதாக இருக்கும்.

பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சந்தோஷம் தர 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுங்கள் என்றார் ஆனந்த கிருஷ்ணன்.

Tuesday, 26 January 2016

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில்

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் தேர்ச்சி பெறுவதும் எளிதுதான். கடந்த 3 ஆண்டுகளாக அறிவியல் தேர்வில்தான் அதிகமான மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண்களையும், அதிகமானோர் தேர்ச்சியும் பெற்றுவருவதே இதற்கு சான்று.

அறிவியல் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, செய்முறைத் தேர்வு (25 மதிப்பெண்கள்) கருத்தியல் தேர்வு (75 மதிப்பெண்கள்) என நடத்தப்படுகிறது.

இதில் செய்முறைத் தேர்வில் குறைந்தது 15 மதிப்பெண்களும் கருத்தியல் தேர்வில் 20 மதிப்பெண்களும் மொத்தம் 35 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி அடைந்துவிடலாம்.

சென்னையில் உள்ள பல்லாவரம் கண்டோன்மெண்ட் கழக உயர்நிலைப் பள்ளி ஆசிரியை பி.சித்ராவும் வேலூர் மாவட்டம் சோழவரம் அரசு மேனிலைப் பள்ளி ஆசிரியர் ஆர்.அமுதனும் மாணவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குகிறார்கள்:

செய்முறைத் தேர்வு

10-ஆம் வகுப்புக்கான அறிவியல் தேர்வின் முதல் கட்டமாக செய்முறைத் தேர்வு உள்ளது. பாடப்புத்தகத்தின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள எளிமையாக பயிற்சிகளே, இந்தத் தேர்வில் கேட்கப்படுகின்றன. கரைசலை அமிலமா,காரமா என அறிதல், உடல் எடை குறியீட்டெண் அறிதல், கனிகளை வகைப்படுத்துதல் உள்ளிட்ட 16 பயிற்சிகள் இதில் உள்ளன. புத்தகத்தில் உள்ள இந்தப் பயிற்சிகளை நன்கு பயின்று தேர்வை எழுத வேண்டும். இதில் 25 மதிப்பெண்கள் பெறுவது எளிது.

ஒரு மதிப்பெண்: கருத்தியல் தேர்வு

ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய பாடப் பகுதிகள் 15,16,17. இந்த மூன்று பாடங்களிலிருந்து கட்டாயம் 5 கேள்விகள் கேட்கப்படும்.

புத்தகத்தில் உள்ள பயிற்சி வினாக்களை மட்டும் படித்தால் 15-க்கு 10 முதல் 12 மதிப்பெண்களை சுலபமாகப் பெறலாம். 15க்கு 15 மதிப்பெண் பெற புத்தகத்தை முழுமையாக உள்ளார்ந்து படிப்பது சால சிறந்தது.

சுமாராக படிக்கும் மாணவர்கள் செய்முறை தேர்வையும் ஒரு மதிப்பெண்கள் பகுதியையும் சிறப்பான முறையில் எழுதினாலே, தேர்ச்சி மதிப்பெண்களான 35 மதிப்பெண்களை நோக்கி முன்னேறிவிடுவார்கள்.

2 மதிப்பெண்

இரண்டு மதிப்பெண்கள் கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய பாடப் பகுதிகள் 3, 5, 8,16,17 ஆகிய ஐந்தும் ஆகும். இந்தப் பாடங்களிலிருந்து மட்டும் மொத்தக் கேள்விகள் 30-ல் 15 கேள்விகள் கேட்கப்படுகின்றன.

5 மதிப்பெண்

இந்தப் பகுதியின் கேள்விகள் விலங்கியல், தாவரவியல், வேதியியல் மற்றும் இயற்பியல் என நான்கு பிரிவுகளில் இருந்து வரக்கூடியவையாக இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு கேள்விகள் வீதம் மொத்தம் எட்டு கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் ஒன்று வீதம் மொத்தம் நான்கு கேள்விகளுக்கு விடையளித்தால் போதும்.

விலங்கியல் பிரிவிலிருந்து வரக்கூடிய கேள்விகளுக்கு பாடப்புத்தகத்தில் உள்ள 1, 2-வது பாடங்களைப் படிக்க வேண்டும். அதைப் போலவே, தாவரவியல் பிரிவிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பாடங்கள் 4, 7-யையும், வேதியியல் பிரிவிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பாடங்கள் 10, 13-யையும் இயற்பியல் கேள்விகளுக்கு பாடங்கள் 15, 17-யையும் நன்றாகப் பயில வேண்டும்.

புத்தகத்தில் இந்தப் பாடப் பகுதிகளில் உள்ள கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கவேண்டும். அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய பாடப்பகுதிகள் 2, 7,10,17 ஆகும்.

கேள்விகளின் பட்டியல்

முக்கியமாக 1, 10, 15, ஆகிய பாடங்களில் உள்ள பயிற்சிகளில் உள்ள கேள்விகளை நன்கு பயிலவும். இந்தப் பாடங்களில் இருந்து என்ன மாதிரியான கேள்விகள் கேட்கப்படலாம் என யோசித்து, நீங்களே ஒரு கேள்விப் பட்டியலையும் தயார் செய்யலாம். மற்ற பாடங்களான 2, 4, 13, 17 ஆகிய பாடங்களில் உள்ள பயிற்சி வினாக்களையும் தயார் செய்தால், மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற உதவியாக இருக்கும்.

படிப்பும் பயிற்சியும்

அறிவியல் பாடத்தைப் பொறுத்தவரை மனப்பாடம் செய்து எல்லாவற்றையும் படித்துவிட முடியாது. அறிவியல் என்பதே பரிசோதனை, ஆய்வு செய்து பார்ப்பது. அதன் முடிவுகளை விதிகளாகத் தொகுப்பது. மீண்டும் பரிசோதித்து பார்ப்பது. விதிகளை மேலும் மேம்படுத்துவது என்று மேலும் மேலும் அறிவியலுக்குள் மூழ்குவது தானே? எனவே, படிப்பதும் பயிற்சி எடுப்பதுமாக தேர்வுவரை ஒரே கவனமாக இருங்கள்.

அறிவியல் தேர்வில் படம் வரைவதற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. படம் வரைவதற்கும் அவற்றின் பாகங்களைக் குறிப்பதற்கும் நன்கு பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். படம் வரைவதற்கான சரியான கருவிகளை தேர்வின்போது மறக்காமல் வைத்திருங்கள்.

100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க விரும்பும் மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் நன்கு பயிற்சி பெற வேண்டிய அவசியம் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. இயல்பாகவே அறிவியல் ஆர்வம் இருந்தால், தேர்வில் அள்ளலாம் 100க்கு 100.

Hidden Camera Find

Hidden Camera Find  ஜவுளிக் கடைகள், லாட்ஜ்களில் ரகசிய கேமராக்களை பொருத்தி பெண்கள் உடை மாற்றுவது போன்ற காட்சிகளை படம் எடுக்கும் அநாகரிக செயல்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரங்கேவது மட்டுமல்லாமல்.. அதிகரித்தும் வருவது இன்றைய பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

சில ஜவுளிக் கடைகளின் உடை மாற்றும் அறைகள், சில லாட்ஜ்களின் படுக்கை அறைகளில் ரகசிய கேமரா வைக்கப்படுகின்றன. இதில் பதிவாகும் காட்சிகளை சிலர் பார்த்து ரசிப்பதோடு, இணைய தளங்கள் வரை பதிவேற்றம் செய்யப்பட்டு அது சம்பந்தப்பட்ட பெண்ணின் அந்தரங்கங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இதனால்.. மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

உடை மாற்றும் அறை, குளியல் அறை, படுக்கை அறை போன்றவற்றில் மறைத்து வைக் கப்படும் ரகசிய கேமராக்கள் சிசிடிவி (கண்காணிப்பு கேமரா) போல பெரிய அளவில் இருக் காது. கண்ணுக்கு தெரியாத இடத்தில் மிக மிக சிறிய அளவில் பொருத்தப்பட்டிருக்கும். ஸ்குருவின் தலைப்பகுதி, கடிகாரம், பிளக் பாய்ன்ட், பிளக் ஹோல்டர், முகம்பார்க்கும் கண்ணாடியின் பின்புறம், குளிர்சாதன பெட்டி, கதவின் கைப்பிடி என எதிலும் இதைப் பொருத்தமுடியும். லாட்ஜ்களில் படுக்கை, குளிக்கும் இடம் ஆகியவற்றை நோக்கியுள்ள அனைத்து இடங்களையும் முதலில் கவனமாகப் பார்க்க வேண்டும். விளக்கை அணைத்த பிறகு, இருட்டாக உள்ள அறைகளில் படம் பிடிக்கக்கூடிய நவீன அகச்சிவப்பு கேமராக்களையும் இந்த அநாகரிக வேலைக்கு பயன்படுத்துகிறார்கள்.

இந்த ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்...

உடை மாற்றும் அறையில் உள்ள ரகசிய  கேமராவை கண்டறிவது எப்படி?

1. அறைக்குள் நுழைவதற்கு முன் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்ய முடிகிறதா.?என்பதை உருதிப்படுத்திக்கொள்ளவும்..

2.பின்னர் அறைக்குள் சென்றவுடன் மீண்டும் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்து பார்க்கவும் .

3.பலமுறை முயற்சித்தும் உங்களால் கால் செய்ய முடியாவிட்டால் நிச்சயம் அங்கே ரகசிய  கேமரா வைகப்பட்டிருகிறது..

எப்படி என்றால்

4..கண்ணாடி இழை கேபிள் (fiber optic cable)வழியாகத்தான் ரகசிய  கேமராக்கள் இணைக்கப்பட்டிருக்கும்.இந்த கண்ணாடி இழை கேபிள் குறுக்கீடுகாரணமாக உங்களுடைய  செல்போன் சமிக்ஞை(signal transfer) பரிமாற்றங்கள் தடை செய்யப்படுவதே நீங்கள் கால் செய்ய முடியாதற்க்கு காரணம்.

ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு, அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுங்கள். பின்னர் அதை ஓடவிட்டுப் பாருங்கள். எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.

செல்போனில் யாரிடமாவது பேசியபடியே அறை முழுவதும் மெதுவாக நடந்து செல்லுங்கள். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம்.

ரகசிய கேமரா மட்டு மின்றி, முகம் பார்க்கும் கண்ணாடி யால் கூட வில்லங்கம் ஏற்பட லாம். பொது வாக உயர் அளவிலான போலீஸ் விசாரணை, ஆட்களை அடையா ளம் காட்டுதல் போன்றவற்றுக்கு ‘டூ வே’ (இருபக்க) கண்ணாடி பயன்படுத்தப்படும். அதாவது, முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடிதான். ஆனால், அதன் பின்னால் இருந்துகொண்டு இங்கு நடப்பதை பார்க்க முடியும். அவர்கள் இருப்பது இங்கிருந்து தெரியாது. லாட்ஜ்கள், ஜவுளிக் கடைகளில் இருப்பது இத்தகைய கண்ணாடி இல்லை என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம்.

டூ வே கண்ணாடியை கண்டறிவது எப்படி?

பொது இடங்களில் நாம் பயன்படுத்தும் கழிப்பறைகள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள், உடை மாற்று அறைகள் போன்ற இடங்களில் வைக்கப்படிருக்கும் கண்ணாடிகள் மூலம் நாம் நம்மை மட்டுமே  பார்க்க இயலும் என்று நினைத்தால் அது தவறு.நமக்கு தெரியாமலே எதிரில் இருந்து வேறொருவர் நம்மை பார்க்க வாய்ப்புள்ளது.அப்படி அவர் நம்மை பார்ப்பது நமக்கு தெரியாது.மாறாக நமக்கு நம் பிம்பம் மட்டுமே பிரதிபலிக்கப்படும்.சரி இதனை எப்படி கண்டறிவது..???

1.உங்கள் கை விரலின் நகத்தினை எதிரே இருக்கும் கண்ணாடியின் மீது வைக்கவும். அவ்வாறு வைக்கும்போது உங்கள் கை விரலின் நகத்திற்கும்,கண்ணாடியில் தெரியும் பிம்பத்தின்  நகத்திற்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருந்தால் அது ஒரு வழியாக மட்டுமே பார்க்க இயலும் கண்ணாடி.எதிர்புறம் இருந்து யாராலும் பார்க்க இயலாது.

2.மாறாக உங்கள் கை விரலின் நகத்திற்கும்,கண்ணாடியில் தெரியும் பிம்பத்தின் நகத்திற்கும் இடையே இடைவெளி இல்லாமல் இரண்டும்(நகங்கள்) ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டால் சந்தேகமே வேண்டாம்,நிச்சயம் அது ஒரு  2 வழி ஆடி கண்ணாடி என்பது உறுதி.எதிர்புறம் இருந்து யார் வேண்டுமானாலும் பார்க்க இயலும்.

3.இதற்கு காரணம் ஒரு வழியாக மட்டுமே பார்க்கக்கூடிய ஒருவழி ஆடி கண்ணாடிகளில் சில்வர்  முலாம் (வெள்ளி முலாம்) பின்புறம் பூசப்பட்டிருக்கும். இருவழி ஆடி கண்ணாடிகளில் சில்வர்  முலாம் (வெள்ளி முலாம்) கண்ணாடிகளின் மேற்பரப்பில்  பூசப்பட்டிருக்கும்.. எனவே பொதுஇடங்களில் கண்ணாடிகள் கொண்ட அறைகளை பயன்படுத்தும்போது இந்த விரல் சோதனை மிக மிக அவசியம் என்பதை நினைவில் கொள்க..!!!

வழக்கத்தைவிட உங்கள் அறையில் விளக்கு வெளிச்சம் அதிகமாக, கண்ணை கூசும் அளவில் இருந்தால், அங்கு இருப்பது இருபக்க கண்ணாடி யாக இருக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால், மங்கலான வெளிச் சத்தில் இத்தகைய கண்ணாடி வழியாக தெளிவாக ஊடுருவிப் பார்க்க முடியாது.

விளக்குகளை அணைத்துவிட்டு கண்ணாடி மீது டார்ச் அடித்துப் பார்த்தால், பின்னால் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியலாம். கருப்பு பிலிம் ஒட்டப்பட்ட காருக்குள் பார்ப்பதுபோல, இரு கைகளையும் அணைத்து வைத்தபடி கண்ணாடியோடு முகத்தை ஒட்டிக்கொண்டு பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியும். 

இதுபோன்ற ரகசிய கேமராக்கள், அகச்சிவப்பு கேமராக்களைக்கூட கண்டுபிடிக்கக்கூடிய கருவிகளும் சந்தையில் கிடைக்கின்றன. 

உங்கள் சகோதரிகள், மனைவி, மகள்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோரிடம் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..!!!! ஏனென்றால் விழிப்புணர்வு ஒன்றே ஆபத்தில் இருந்து தப்பிக்கும் எளிய வழி..