தமிழில் பேசுவதையும், கையொப்பமிடுவதையும்
பற்றி வேந்தர் எழுதியிருந்தார். தமிழ் எண்களை
எளிதாக நினைவில் கொள்ள ஒரு வழியை
ஓர் அன்பர் கவனப்படுத்தி இருந்தது நினைவுக்கு
வந்தது -
பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம்,
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-ல் இருந்து
0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்
பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன்.
உடனே அப்பெண், “1 2 3 4 5 6 7 8 9 0 என்ற எண்ணுக்கு
முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′ என்றாள்.
“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.
அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி
மனப்பாடம் செய்ததாக கூறினாள்.
அதாவது, “க’டுகு, “உ’ளுந்து, “ங’னைச்சு, “ச’மைச்சு, “ரு’சிச்சு,
“சா’ப்பிட்டேன், “எ’ன, “அ’வன், “கூ’றினான்; “ஓ’ என்றாள்.
No comments:
Post a Comment